10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கா? முக்கிய வானிலை அறிவிப்பு..!!

Rain 2026

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் எதிரொலியாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.


ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 15ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரையில் நாளை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.

ஆகஸ்ட் 18ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.

ஆகஸ்ட் 19ம் தேதி தேனி, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 20ம் தேதி தேனி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை / இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Read More : கோவை என்ன பாகிஸ்தானிலா இருக்கு..? தேசியக்கொடி ஏந்தி பேரணி செல்வது பாவச்செயலா? தவெக அரசை விளாசிய ஐகோர்ட்..!!

Next Post

கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய பெண் மருத்துவர்..! நோயாளிகள் மீது ஸ்பிரே தெளித்ததால் மூச்சுத்திணறல்..! கலவரமான மருத்துவமனை..!

Fri Aug 14 , 2026
திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் அவர்களது மனைவிகளும் மருத்துவர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சகோதரர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையை யார் நிர்வகிப்பது என்ற பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரான அழகாநந்தா என்பவர் திடீரென மருத்துவமனையின் மூன்றாவது தளத்திற்கு சென்று அங்கிருந்த செவிலியர்களிடம் தகராறில் […]
Trichy 2026

You May Like