திருமணமான 15 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெபி மெட்டில்டா. டித்து பட்டதாரியான ஸ்டெபி மெட்டில்டா, மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்று ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரும் அவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த ராஜ்மோகன் என்பரும் சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், இருவீட்டாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. வரதட்சணைப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி ஆடம்பரமாக இரு வீட்டார் முறைப்படி திருமணத்தை நடத்தினர். காதலித்து திருமணம் செய்துகொண்ட சந்தோஷத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய மெட்டில்டா, ஒரு சில மாதங்கள் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ராஜ் மோகன் புதியதாக கோழிப் பண்ணை தொடங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் மாமியாரிடம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனக் கூறியவர், கையில் இருந்த சிறிது பணத்தைக் கொடுத்துள்ளார். அதன்பின், மனைவியிடம் தொடர்ந்து பணம் மற்றும் நகையைக் கேட்டுத் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார் ராஜ் மோகன்.
இரவு நேரத்தில் வேறொரு பெண்ணிடம் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த மெட்டில்டா, பலமுறை அவரைக் கண்டித்து உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றாம் தேதி ராஜ்மோகன் வேறொரு பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்தச் சண்டையில் ஸ்டெபி மெட்டில்டா மயங்கி விழுந்துள்ளார். உடனே ராஜ்மோகன், ஸ்டெபியின் அண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு, ஸ்டெபி தடுக்கி விழுந்து மயங்கி விட்டதாகத் தகவல் கொடுத்துள்ளார். உடனே வீட்டிற்கு வந்த அண்ணன் டார்வின், ஸ்டெபியைத் தூக்கிக் கொண்டு பெருங்களத்தூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஸ்டெபி ஏற்கனவே இறந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஸ்டெபி தனது செல்போனில், தன் கணவன் தன்னை மனரீதியாகத் தொந்தரவு செய்வதாகவும், ஜாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாகவும் தோழியிடம் பேசும் ஆடியோ ஒன்று ஸ்டெபியின் தாயிடம் கிடைத்துள்ளது. அதைக் கேட்டு அதிர்ந்து போன ஸ்டெபியின் தாய், தன் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறிப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்டெபியின் உடற்கூராய்வு அறிக்கை அதிர்ச்சித் தகவலுடன் வெளியானது. அதில், ஸ்டெபியின் மார்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, ராஜ்மோகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்திச் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Read more: முத்த மழை பாடலுக்கு கோரஸ் பாடிய இந்த பொண்ண கவனிச்சீங்களா..?