தனது பெற்றோரிடம் இருந்து கணவரை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை அந்த கணவர் விவாகரத்து செய்ய முடியும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..
மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிரசாந்த் குமார் மண்டல் என்பவர் தனது மனைவி ஜர்னாவிடம் இருந்து விவாகரத்து கோரி, மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் “வேலையற்றவர்” மற்றும் “கோழை” என்று கணவரை பகிரங்கமாக அவமதித்ததன் அடிப்படையில் அந்த நபருக்கு அவரது மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்கியது.
குடும்ப நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்த பெண் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.. இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் சௌமென் சென் மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 31-ம் தேதி விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த பெண்ணின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், “பெற்றோருடன் வாழ்வதும், அவர்களை பராமரிப்பதும் மகனின் புனிதமான கடமை. இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளில் இது முற்றிலும் இயல்பானது..
தனது கணவர் அவரின் பெற்றோரை பிரிந்து தனியாக வசிக்க வேண்டும் என்ற அந்த பெண்ணின் ஆசை, நியாயமான காரணங்களின் அடிப்படையில் இல்லை.. எல்லாவற்றிற்கும் மேலாக அது கொடுமைக்கு சமம். எனவே அவரின் பெற்றோரிடம் இருந்து கணவரை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை மன ரீதியான கொடுமை என்ற அடிப்படையில் அந்த கணவர் விவாகரத்து செய்ய முடியும்..” என்று தெரிவித்தனர்..