மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் ..!

பிரித்தானியாவில் நார்தாம்ப்டன்ஷயர் பகுதியில் உள்ள கெட்டரிங்கில் குடியிருப்பில் டிசம்பர் 15ம் தேதி ஜீவா சஜு(6), ஜான்வி சஜு(4) ஆகிய குழந்தைகளுடன் அவர்களின் தாயாருமான அஞ்சு அசோக் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


இந்நிலையில், உடற்கூராய்வுக்கு பின்னர் வெளியான அறிக்கையில், குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் அஞ்சு அசோக் மூச்சுத்திணறலால் இறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள அஞ்சுவின் கணவரான சஜு மீது சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் நார்தாம்ப்டன்ஷயர் பகுதி காவல்துறையினர் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துள்ளார் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையில் , நார்தாம்ப்டன்ஷயர் பகுதி நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு சோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதால் வழக்கை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைதாகியுள்ள சஜு மார்ச் 24ம் தேதி வரையிலும் விசாரணைக் கைதியாக சிரையில் இருப்பார்  என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

மனைவியை கொன்று வீட்டின் முன்பு புதைத்த கணவன்..!! ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..!!

Sat Jan 14 , 2023
மனைவியின் மீதான சந்தேகத்தால் அவரை கொலை செய்து வீட்டின் முன்பு புதைத்த சம்பவத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 2021இல் ஆகஸ்ட் மாதம் ரம்யாவை […]
மனைவியை கொன்று வீட்டின் முன்பு புதைத்த கணவன்..!! ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..!!

You May Like