“அவன் கூட பழகாத…” மனைவியை எச்சரித்த கணவன்.! கரும்புக்காட்டில் கொலை.! பகீர் வாக்குமூலம்.!

கள்ளக்காதல் காரணமாக கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு மலர் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கண்டமங்கலம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பாண்டியனின் மனைவி மலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சந்தேக மரணம் தொடர்பான நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவர் பாண்டியன் மேல் சந்தேகம் இருந்ததால் காவல்துறை விழுப்புரத்தில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் தனது மனைவி வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்ததாகவும் அதனை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தும் கேட்காததால் கொலை செய்து கரும்புக்காட்டில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

Google Pay யூஸ் பண்றீங்களா..? ஆபத்து..!! உடனே Uninstall பண்ணுங்க..!! கூகுள் நிறுவனம் எச்சரிக்கை..!!

Thu Nov 23 , 2023
இந்திய மக்கள் கூகுள் பே-வை (Google Pay) அதிகம் நம்புவதற்கு காரணமே கூகுளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் தான். இந்நிலையில், கூகுள் நிறுவனம், கூகுள் பே பயனர்கள் ஒருபோதும் செய்யவே கூடாத சில விஷயங்களை அதன் இணையதளம் மூலம் பகிர்ந்துள்ளது. அதில், கூகுள் பே செயலியில் பின் நம்பரை டைப் செய்யும் போதும், பரிவர்த்தனைகளை செய்யும் போதும் ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை பயன்படுத்தவே கூடாது. இது […]

You May Like