விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வானந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பட்டாசு அலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.
ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று இரவு பாண்டி செல்வம் வெளியில் சென்றபோது, பணி நிமித்தமாக வெகுதூரம் சென்றுவிட்டதாக நினைத்து கருப்பசாமிக்கு போன் செய்துள்ளார் ரூபா. அவர் வந்ததும் இருவரும் படுக்கையில் படுத்திருந்தனர்.
அப்போது வெளியே சென்றிருந்த பாண்டி செல்வம் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். மற்றொரு வாலிபர் தன் கண் முன்னே மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த பாண்டி செல்வம், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து படுத்திருந்த கருப்பசாமியை சரமாரியாக அடித்தார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த பாண்டி செல்வம் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி செல்வத்தை தேடி வருகின்றனர். பாண்டி செல்வம் தன்னை போலீசார் தேடி வருவதும் தெரிந்து தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.