#வேலூர்: நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்..! 

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பேர்ணாம்பட்டு அருகே உள்ள அச்சிஞ்சிக்குப்பம் பகுதியைச் ஜெய்சங்கர் – புனிதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர்.


இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்சங்கர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் புனிதா வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, ​​அவரை எதிர்பார்த்து காத்திருந்த கணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கடுமையாக தாக்கியுள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

அங்கிருந்தவர்கள் புனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

சுவையான தரமான பேபி கார்ன் 65..!

Tue Jan 24 , 2023
பேபி கார்ன் 65 வீட்டிலேயே செய்வது என்பது குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.  தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 12, மைதா மாவு – 2 மேஜை கரண்டி, எலுமிச்சை சாறு – சிறிதளவு, அரிசி மாவு – 3 மேஜை கரண்டி, சோளமாவு – 1.5 மேஜை கரண்டி, இஞ்சிபூண்டு விழுது – சிறிதளவு, மிளகாய்தூள் – 1 மேஜை கரண்டி, தயிர் – 5 கரண்டி, […]
Screenshot 2023 01 24 20 24 14 22 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like