“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல..” சனாதனம் குறித்த பேச்சுக்கு உதயநிதி விளக்கம்..!

udhay 3

சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனம் ஒழிக்கபட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..


இந்த நிலையில் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ”மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்”-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.

சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி – கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.

பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

பலமுறை இடிக்கப்பட்டும் மீண்டும் எழுந்த சோமநாதர் கோயில்..! பின்னணியில் இவ்வளவு வரலாறா..?

Fri May 15 , 2026
Somanathar Temple, which was demolished many times and was rebuilt..! Is there so much history behind it..?
somarnath

You May Like