’நீட் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’..!! ’ஏமாற்ற மாட்டேன்’..!! உதயநிதி ஸ்டாலின் உறுதி..!!

மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதி கொடுத்தேன். உண்மைதான். நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன். மக்களை ஏமாற்ற மாட்டேன். என்ன விமர்சனம் வந்தாலும் கேலிகள், கிண்டல்கள் வந்தாலும் அமைச்சர்களும், நானும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். நான் எப்போதுமே மாணவர்களின் பக்கம் நிற்பேன். நீட் பிரச்சனை மக்கள் போராட்டமாக மாற வேண்டும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

’கணவன் மது அருந்துவது மனைவியை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்’..!! பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்..!!

Fri Aug 18 , 2023
`ஆண் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, மனைவியை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம்’ என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ராய்கரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ”தனது கணவர் சம்பாதிப்பதில்லை. அவரது குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் நிலை மோசமடைந்தது. குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவும் அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டபோது என்னை மிரட்டினார். இதனால் எனக்கு விவாகரத்து வேண்டும்” என கோரியிருந்தார். […]

You May Like