சினிமாவில் நடிக்க வைக்கிறேன்!… ஆசை வார்த்தைக்கூறி நண்பர்களுடன் இளம்பெண்ணை சீரழித்த கொடூரம்!… கேரளாவில் அதிர்ச்சி!

இளம்பெண் ஒருவர் சினிமா ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் அரங்கேரியுள்ளது.


கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். பின்னர் அது தொடர்பாக பேச வேண்டும், உன்னை முன்னணி நடிகையாக்குகிறேன் என கூறி அந்த பெண்ணை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளார். சினிமா ஆசையில் அந்த நபர் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் இளம்பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நடந்தவற்றை கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ள அந்த பெண், தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர்கள் அனைவரும் என்னைச் சேர்ந்து மிரட்டுகின்றனர் என கூறியுள்ளார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser3

Next Post

பொது மக்களின் கவனத்திற்கு...! ரேஷன் பொருட்கள் தொடர்பாக இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்...! முழு விவரம் உள்ளே...!

Thu Mar 9 , 2023
ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ விற்று […]
ரேஷன்

You May Like