மயிலாடுதுறையில் காணாமல் போன கோவில் சிலைகள்…..! அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு…….!

தமிழகத்தில் கும்பகோணம் சரகத்தில் உள்ள தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற பழமையான கோவில்களுக்கு சொந்தமான சேலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிறப்பு தணிக்கை செய்து வருகிறார்கள்.


அந்த விதத்தில், கடந்த மாதம் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் தர்மபுரம் நிர்வாகத்தில் உள்ள அருள்மிகு விரட்டேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடிப்பு பிரிவு காவல்துறையினர் தணிக்கை செய்தனர் அப்போது கோவிலில் இருந்த வீணாதார தட்சிணாமூர்த்தி சிலைக்கு பதிலாக போலீஸ் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே பாண்டிச்சேரி உள்ள மியூசியத்தில் இருந்த காணாமல் போன சிலையின் பழைய புகைப்படத்தை எடுத்து பல்வேறு அருங்காட்சியகங்களின் வலைதள பக்கத்தில் இருக்கின்ற சிலைகளின் படங்களுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அமெரிக்காவில் உள்ள கிலேவ்லேண்ட் அருங்காட்சியகத்தின் வலைதளத்தில் காணாமல் போன தட்சணாமூர்த்தி உலோக சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள தட்சணாமூர்த்தி சிலையை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவரும் பணிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன. அதோடு இந்த சிலையானது கோவிலில் இருந்து எப்படி திருடு போனது என்றும் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

சிறுநீர் இந்த நிறத்தில் வருகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!! உடனே மருத்துவரை அணுகுங்கள்..!!

Tue May 2 , 2023
மோசமான வாழ்க்கை முறை நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. இந்த நோயால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய். இதனால் முழு உலகமும் தவித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் அளவு குறைந்தாலோ அல்லது இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டாலோ, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரிசமமாக வைக்க […]
doctor

You May Like