ரஷ்யாவை, சீனா ஆதரித்தால் உலகப்போர் ஏற்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை ஆதரிப்பதற்கு எதிராக சீனாவை எச்சரித்தார். இதுகுறித்து பேசிய ஜெலன்ஸ்கி “எங்களைப் பொறுத்தவரை, இந்த போரில் சீனா ரஷ்ய கூட்டமைப்பை ஆதரிக்காதது முக்கியம்… உண்மையில், அது எங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருப்பினும், தற்போது அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை.. ஆனால் சீனா ரஷ்யாவுடன் கூட்டணி வைத்தால், ஒரு உலகப் போர் ஏற்படும், அதை சீனா அறிந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்..

சீனா ரஷ்யாவிற்கு பொருள் உதவி வழங்கினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனாவை எச்சரித்ததை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்..
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு சென்றிருந்தார்.. உக்ரைன் தலைநகரில் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.. 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் உக்ரைனுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்று ஜோ பிடன் தெரிவித்தார்.. போர் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உக்ரைனுக்கு ஆதரவாக நட்பு நாடுகளை ஒன்றிணைக்க பிடன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது…