கர்ப்பிணி பெண்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. அதிலும் காலை உணவில் சில காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். அது என்னவென்று தெரியுமா? அதில் அத்தியாவசியமான காயானது கொத்தவரங்காய் தான். இதில் இருக்கும் மருத்துவப் பயன்கள் பற்றி இங்கே அறிவோம்.

கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் உண்பதன் மூலம் குழந்தை கருவில் ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறப்பினால் குழந்தைகளுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை கொத்தவரங்காய் குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. அதனால் இதனை கட்டாயமாக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த கொத்தவரங்காயில் அதிக வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் கொண்டிருக்கின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு உணவில் இதனை அதிகம் சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்ல பயனடையலாம். தொடர்ந்து இரத்தச் சோகை உள்ளவர்களும் இதை சாப்பிட்டு வர அதிக இரத்தம் சுரந்து இரத்த சோகையை குணப்படுத்த முடிகிறது. இரத்தத்தின் பற்றாக்குறையை நீக்கி உடல் நலனை மேம்படுத்தவும் உதவுகின்றது.
கொத்தாரவங்காயில் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. அத்துடன் அதிக அளவில் கார்போடை, புரதச்சத்துகள், ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றது. மேலும் உணவில் அதிகம் கொத்தவரங்காய் சேர்த்து உண்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.