Subcidy: 1 ஏக்கர் நிலம் இருந்தால் போதும்… ரூ.10,000 வழங்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!

tn Govt subcidy 2025

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் பணிகளை செய்து வருகின்றனர்.

மேற்படி மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பினை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டும் மற்றும் மீன் உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 எக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000/- மானியமாக வழங்கப்படவுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம். மேலும், இத்திட்டம் குறித்தான இதர சந்தேகங்களுக்கும். விண்ணப்பங்கள் பெறவும் ஒட்டப்பட்டியில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: “வீடியோ கால் மூலம் ஆபாச பேச்சு”..!! “காதல் வலையில் பலரை வீழ்த்தி சொகுசு வாழ்க்கை”..!! இளம்பெண் மரண வழக்கில் திடுக்கிட வைக்கும் உண்மை..!!

Vignesh

Next Post

மக்களே உஷார்...! இந்த லிங்க பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்த வேண்டாம்...! மின் வாரியம் எச்சரிக்கை...!

Sun Jun 8 , 2025
மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், […]
EB Bill 2025

You May Like