கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று அவ்வாறு இருக்கையில் இன்று முளைக்கீரையின் பலன்களை பற்றி இங்கே காணலாம். முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவை குடுப்மது மட்டும் இல்லாமல் பசியையும் நன்கு தூண்ட உதவுகிறது.
இந்த கீரையை நன்கு கழுவி விட்டு உப்பு, வெங்காயம், புளி, பச்சை மிளகாய், போன்றவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்பு அதனை கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்ட வேண்டும். இவ்வாறு கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பித்த எரிச்சல், உடல்சூடு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் குணமாகிறது.
சிலருக்கு வெப்பத்தால் எரிச்சல் ஏற்படுபவருக்கு முளைக்கீரை உண்ணும் போது கண்ணும் குளிர்ச்சியடையும். இதனை தொடர்ந்து முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொறி, சிறங்கு முதலிய பல நோய்கள் குணமாக்கும் தன்மை கொண்டது. முளைக்கீரை அரைத்து அந்த சாறினை எடுத்து கொண்டு அதில் சீரகத்தை சேர்த்து ஊறவைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், பித்த நோய், மயக்கம், போன்ற பிரச்சனைகள் குணமாகும்.மேலும் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட குடல் புண்கள் மற்றும் நீர்க்கடுப்பு மறையும்.