திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள பூச்சி அத்திமேடு கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது. அதோடு இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவருடைய வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் உள்ளிட்டோர் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில் முத்துக்கிருஷ்ணனுக்கும், எஸ்தருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு எஸ்தரின் மருமகனுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, முத்து கிருஷ்ணனை பார்த்து எஸ்தரின் மருமகன் மணிகண்டன் என்னுடைய மாமியார் வீட்டிற்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முத்துகிருஷ்ணன் வழக்கம் போல வீட்டிற்கு வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட எஸ்தரின் மருமகன் முத்துகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகின்றது.
அதன் பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால் மணிகண்டன் ஆத்திரமடைந்து இளநீர் வெட்டும் அரிவாளால் முத்துக்கிருஷ்ணன் தலையில் சரமாரியாக வெட்டியிருக்கிறார் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இதனை தொடர்ந்து எஸ்தரின் மருமகன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உறவினரின் வீட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்தனர்.