தமிழகத்தில் தற்போது பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இன்று நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகின்றது. ஆகவே நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம்? எப்படி விண்ணப்பம் செய்யலாம்? கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? போன்ற அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இலவச எண் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில், மாணவர்கள் இது குறித்த சந்தேகங்களை 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அது தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. மற்ற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் இருக்கின்ற நல்ல கல்லூரிகளில் தங்களுடைய குழந்தைகளை அனுப்புவதற்கு தயங்கும் பெற்றோருக்கும் அதற்கான ஆலோசனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.