வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.20,500 வருமானம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்..!!

போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500 மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்படும்.

அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும். அதுமட்டுமின்றி சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1,000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசானது 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள்.

Read More : 30 வயதுக்கு பிறகு கட்டாயம் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியவை..!! மக்களே மறந்துறாதீங்க..!!

Chella

Next Post

தமிழ்நாட்டில் 69.46% வாக்குப்பதிவு..! 2019-ஐ விட 3% குறைவு..! இந்திய தேர்தல் ஆணையம் தகவல்…!

Sat Apr 20 , 2024
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே […]

You May Like