அக்னி வீரர்‌ பணிக்கு ஆட்கள்‌ தேர்வு செய்யும் முகாம்…! 15-ம் முதல் தொடங்கும் என அறிவிப்பு…!

இந்திய இராணுவத்திற்கு அக்னி வீரர்‌ (ஆண்கள்‌), அக்னி வீரர்‌ (ராணுவ பெண்‌ காவலர்‌), இராணுவ தொழில்நுட்ப உதவி செவிலியர்‌, உதவி செவிலியர்‌ (கால்நடை மருத்துவம்‌), மற்றும்‌ இளநிலை அதிகாரிகள்‌ (மதஆசிரியர்‌) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்வு செய்யப்படவுள்ளனர்‌.


இதற்கான தேர்வு முகாம்‌ வரும்‌ நவம்பர்‌ 15.11.2022 முதல்‌ 29.11.2022 வரை வேலூரில்‌ உள்ள மாவட்ட விளையாட்டு திடலில்‌ நடைபெறுகிறது. இதில்‌ பங்கேற்க வரும்‌ விண்ணப்பதாரர்கள்‌ https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை தவறாமல்‌ கொண்டு வரவேண்டும்‌.

மேலும்‌ தமிழகம்‌, ஆந்திரா மற்றும்‌ தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச்‌ சேர்ந்த எற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள்‌ இந்தஆட்சேர்ப்பு முகாமில்‌ பங்கேற்கலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மின் துறையில் வேலைவாய்ப்பு…! உடனடியாக விண்ணப்பிக்கவும்…!

Sat Nov 5 , 2022
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Computer Operator And Programming Assistant பணிகளுக்கு மொத்தம் பத்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது. […]
Tn EB job

You May Like