நடுவானில் விமானத்தில் சண்டையிட்ட இந்தியர்கள்- வீடியோ வைரல்…

பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


பாங்காக்கில் இருந்து தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் கொல்கத்தா நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு இந்தியர் தன்னுடைய கைப்பையை நடைபாதையில் வைத்து இருந்ததாகவும், மற்றொருவர் அதை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து விமான பணிப்பெண் ஒருவர் இவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சண்டை குறித்து தாய் ஸ்மைல் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. சண்டை போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த வீடியோ தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

1newsnationuser3

Next Post

'ஆசைவார்த்தை கூறி 50 முறை'..!! இளம்பெண்ணை கதறவிட்ட போலீஸ்காரர்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Thu Dec 29 , 2022
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 50 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், பிரயாக்ராஜ் பகுதியில் தான் வசித்து வந்தபோது காவல்துறையில் பணியாற்றி வரும் சுனில்குமார் சிங் என்பவருடன் பழக்கம் […]
Rape e1667877828212

You May Like