12 நாள் போர்.. இஸ்ரேல் தாக்குதலில் 610 பேர் பலி..!! – ஈரான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

iran earthquake 11zon

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் அடங்குவர். தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 185 பேர் பெண்கள்.

இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப் பணியாளர்கள் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களினால் 7 மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, ஈரானின் செம்பிறைச் சங்கத்தின் 4 பணியாளர்கள் மோதல்களில் உயிரிழந்தனர் என அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமி, “நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சேதங்களை கணக்கெடுத்து வருகிறோம். உற்பத்தி மற்றும் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் முன்னோட்ட திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன,”
எனத் தெரிவித்தார்.

12 நாட்கள் நடைபெற்ற இஸ்ரேல் ஈரான் மோதல் நேற்று காலை முதல் முடிவுக்கு வந்தது. இப்போரில் ஈரான் தரப்பில் 950 பேர் பலியானதாக அமெரிக்க மனித உரிமை குழு முன்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஈரான் தரப்பில் 610 பேர் உயிரிழந்ததாகவும், 4,700 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: ட்ரம்ப்-க்கு நோஸ்கட்.. இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ஈரான்.. 3 பேர் பலி..

Next Post

பூமியில் கொசுக்கள், பாம்புகள் இல்லாத ஒரே நாடு இதுதான்.. ஜப்பான், சீனா, அமெரிக்கா இல்ல..

Wed Jun 25 , 2025
Did you know that there is an exceptional place on this earth that is free of mosquitoes and snakes?
1776816 arjun 2025 06 23t131227.769

You May Like