நமது வீட்டின் அருகே எங்கு பார்த்தாலும் அங்கும் இங்கும் கொடியில் படர்ந்து கிடக்கும் கோவைக்காயானது பழங்காலத்திலிருந்தே சர்க்கரை நோய்க்காக மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்க்கரை வியாதிக்கு தொடர்ச்சியிலே கோவைக்காய் உண்பது நல்ல பலனை தரக்கூடியது. கோவைக்காயின் சாறினை குடிப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே இதனை அச்சமின்றி உண்டு வரலாம்.
கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை மிதமாக கட்டுப்படுத்தி வைத்து கொள்கிறது. பரம்பரை பரம்பரையாக தொடரும் சர்க்கரை நோயுள்ளவர்கள், கோவைக்காயினை 35 வயது முதலிருந்தே உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். இதனால் சர்க்கரை நோய் வராமலே தடுக்க உதவுகிறது.
கோவைக்காயில் பச்சடி செய்து உண்டு வரலாம். இதனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு அதனுடன் மிளகுப்பொடி, மோர், சீரகப்பொடி மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து கொள்ள வேண்டும். இது தான் கோவைக்காய் பச்சடி. பச்சடியை வாரத்திற்கு இரண்டு பகல் உணவில் சேர்த்து வர வாய்ப்புண் குணமடைந்து விடும்.