“முக்கிய அறிவிப்பு” தமிழக அரசு சார்பில் 2023-ம் ஆண்டிற்கான UPSC இலவச பயிற்சி வகுப்பு…! 7-ம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்…

சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. வரும் 7-ம் தேதி முதல் 27-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

தமிழக அரசின்‌ சென்னை, அகில இந்தியக்‌ குடிமைப்பணித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையம்‌, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித்‌ தேர்வு பயிற்சி மையங்கள்‌, கோயம்புத்தூர்‌, மதுரை ஆகிய பயிற்சி மையங்களில்‌, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த இளம்‌ பட்டதாரிகள்‌ மற்றும்‌ முதுநிலை பட்டதாரிகள்‌ ஆகியோருக்கு, 28.05.2023 (ஞாயிற்றுக்‌ கிழமை) அன்று நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம்‌ நடத்தும்‌ குடிமைப்பணித்‌ தேர்விற்கு கட்டணமில்லாப்‌ பயிற்சியினை அளிக்க உள்ளது.

சென்னை, அகில இந்தியக்‌ ன குடிமைப்பலளித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையம்‌ கட்டணமில்லாமல்‌ தங்கும்‌ வசதி, தரமான நூலகம்‌, காற்றோட்டமுள்ள வகுப்பறைகள்‌ ஆகியவற்றை வழங்குகிறது. இப்பயிற்சி மையம்‌ 225. மூழுநேரத்‌ தேர்வர்களையும்‌, 100 பகுதிநேரத்‌ தேர்வர்களையும்‌ முதல்நிலைப்‌ பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வுப்‌ பயிற்சி மையங்கள்‌, கோயம்புத்தூர்‌, மதுரை ஆகிய பயிற்சி மையங்களில்‌, தலா 100 முழுநேரத்‌ தேர்வர்களை முதல்நிலை தேர்வு பமிற்சிக்காக அனுமதிக்கின்றன.

2023-ஆம்‌ ஆண்டில்‌ மத்தியக்‌ தேர்வாணையக்குழு நடத்தும்‌ குடிமைப்‌பணிகளுக்கான முதல்நிலைத்‌ தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும்‌ தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணவர்கள்‌ அகில இந்திய குடிமைப்பணித்‌ தேர்வும்‌ பயிற்சி மைய இணையதளம்‌ “civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக 07:10.2022 முதல்‌, 27.10.2022 வரை விண்ணப்டிக்கலாம்‌. இப்பயிற்சி மையத்தில்‌ ஏற்கெனவே முதல்நிலைத்‌ தேர்வுக்கு முழு நேரப்‌ பயிற்சி பெற்றவர்கள்‌ விண்ணப்பிக்க.வேண்டாம்‌. மேலும்‌, விண்ணப்பிக்கும்பட்சத்தில்‌ அவர்களின்‌ விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.

மேலும்‌, பயிற்சியில்‌ சேர விரும்புபவர்கள்‌ தங்கள்‌ கல்வி மற்றும்‌ வயது ஆகிய தகுதிகள்‌ குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக்‌ குழுவின்‌ இணைய தளத்தில்‌ பார்த்து தெரிந்து கொள்ளலாம்‌ தகுதியுடைய நபர்கள்‌ 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை அண்று நடைபெறும்‌ நுழைவுத்‌ தேர்வுக்கு அணுமதிக்கப்படுவர்‌.முதல்நிலைத்‌ தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள்‌ விரைவில்‌ வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்படும்‌ மாணவ/மாணவியர்கள்‌ தாங்கள்‌ தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில்‌ இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப்‌ பயிற்சிக்கு அழைக்கப்படுவர்‌ டிசம்பர்‌ மாதம்‌ இரண்டாவது வாரத்தில்‌ பயிற்சி வகுப்புகள்‌ தொடங்கப்படும்‌.

Vignesh

Next Post

தமிழகத்தில் நித்யானந்தா...? ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய மக்கள்...! பின்னணி என்ன...?

Tue Oct 4 , 2022
பாலியல் புகார், தான் கடவுளின் அவதாரம் என்று கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். பின்னர் அவர் சொந்தமான கைலாச தீவை வாங்கி வசித்து வருவதாக இன்று வரை கூறப்படுகிறது. ஆனால், நித்யானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் கைலாசத்தின் சரியான இடம் தெரியவில்லை. சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக யூடியூப்பில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். […]

You May Like