ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது கட்டாயமா..? வேகமாக பரவும் தகவல்.. உண்மை என்ன..?

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயம் என்று கூறும் செய்தி வைரலாகியுள்ளது. அந்த செய்தியில், ‘ தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 இன் படி, வாக்காளர் ஐடி மற்றும் ஆதாரை இணைப்பது இப்போது கட்டாயமாகும். இதனை உடனடியாக இணைக்க வேண்டும்.. வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை தேர்தல் ஆணையம் பதிவிறக்கம் செய்யவும் அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் எண் 1950 என்று எண்ணுக்கு டயல் செய்யவும். ” என்று குறிப்பிட்டுள்ளது.. மேலும் அந்த செய்தியுடன், வாக்காளர் ஐடி மற்றும் ஆதாரை இணைக்கலாம் என்ற கோரிக்கையுடன் இரண்டு இணைப்புகள் பகிரப்பட்டுள்ளன.

FogLwYqaIAAlL2r

இந்திய பத்திரிகை தகவல் பணியகமான PIB இது போலியான செய்தி என்று தெரிவித்துள்ளது.. மேலும் “ தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 இன் படி, இப்போது வாக்காளர் ஐடி மற்றும் ஆதாரை இணைப்பது” என்று கூறப்பட்டு வருகிறது. இந்தக் கூற்று போலியானது” என்று தெரிவித்துள்ளது..

இதனிடையே, வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என மத்திய சட்ட அமைச்சர் கரேன் ரிஜிஜு டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் செயல்முறை தன்னார்வமானது என்றும், அதைச் செய்ய வாக்காளர் சம்மதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்..

தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021, வாக்காளர் பதிவு அலுவலர்கள் தங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று அனுமதிக்கிறது, ஆனால் இது தனிப்பட்ட நபர்களின் விருப்பம் என்றும் அவர் கூறினார். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று எந்த விதியும் உருவாக்கப்படவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

யார பார்த்தது ஊழல் கட்சினு சொல்றீங்க..? உங்க மூஞ்சை Dettol போட்டு கழுவுங்க...! காங்கிரசுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி...!

Sat Feb 11 , 2023
ஊழலைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோ மக்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன் காங்கிரஸ் தலைவர்கள் முகத்தை ‘டெட்டால்’ […]
images 2023 02 11T060108.307

You May Like