ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்.. பிரேமலதாவின் டபுள் ப்ளான் இதுதான்.. அப்போ அதிமுக கூட்டணி..?

premalatha vijayakanth

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். 


இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ள நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் வசம் இழுக்க திமுக திட்டம் தீட்டி வருகிறது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் தேமுதிக பங்கேற்றது கூட்டணிக்கு அட்சாராமா என கேள்வி எழுந்துள்ளது. தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read more: BREAKING | தெலங்கானாவில் பயங்கரம்..!! அரசுப் பேருந்து – டிப்பர் லாரி மோதிய விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பலி..!!

English Summary

It has been reported that Premalatha is in talks with the DMK for an alliance.

Next Post

Flash : 20 பேர் பலி.. 18 பேர் காயம்.. பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. தெலங்கானாவில் சோகம்..!

Mon Nov 3 , 2025
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டியில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.. 18 பேர் காயமடைந்தனர். செவெல்லா அருகே தெலுங்கானா சாலை போக்குவரத்துக் கழக (RTC) பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, டிப்பரில் இருந்த சரளைக் கற்கள் பேருந்தின் மீது விழுந்தன. மோதிய பிறகு பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. […]
telangana bus

You May Like