குழந்தைகளை விவாகரத்திற்கு பின்னர் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்மந்தப்பட்ட குடு
மதுரை மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் ஆஜராகி மனு குறித்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் குழந்தையை மனுதாரரின் கணவர் தன்னுடன் வைத்துள்ளார். இவர்கள் சம்மந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதிகள், ’’ மனுதாரரின் மைனர் குழந்தைகள் அவர்களது தந்தையிடம் இருப்பது சட்ட விரோதம் ஆகாது. எனவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை ஆட்கொணர்வு மனுவில் தீர்க்க இயலாது. எனவே சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை நீங்கள் அணுகலாம்’’ என தெரிவித்தனர்.
இதற்கு முன்பு வரை இதுபோன்ற வழக்குகளில் குழந்தைகளை வளர்க்க பெண்கள் தேவை என்பதாலும் மைனர் குழந்தைகளை ஆண்களால் பராமரிக்க முடியாது என்பதாலும் பெண்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன. இந்நிலையில் சமீபத்தில் இது போன்ற தீர்ப்புகளில் ஆண்களுக்கு சாதகமாக வரும் தீர்ப்புகள் பெண்களுக்கு அதிருப்தியாக உள்ளது. எனினும் சரியான காரணம் இருக்கும் பட்சத்தில் பெண்கள் பக்கம் சாதகமாக சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.