கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி படுகொலை……! ஜார்கண்ட் மாநிலத்தில் பயங்கரம்…..!

ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கின்ற போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தில் இருக்கின்ற காட்டுப் பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில் அந்தப் பெண்ணின் உடைகள், பைக் சாவி உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டனர்.


அவற்றின் மூலமாக அடையாளம் காணப்பட்டதில் படுகொலை செய்யப்பட்ட பெண் அந்த பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான மாலோதி சோரன் என்று தெரியவந்தது அவருடைய கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியானது.

அதாவது உயிரிழந்த பெண்ணின் சகோதரர் ராணி சோரன் வழங்கிய வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மாலோதிக்கு தேலு என்ற நபருடன் பல வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் 1 பெண் என்று மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய நிலையில் சில மாத காலமாகவே மாலோதியின் கணவர் தேலுவுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்துள்ளது. இது மாலோதிக்கு தெரிந்ததால் அதனை அவர் கண்டித்து இருக்கிறார். இது குறித்து தம்பதிகள் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கணவர் தேலு மனைவியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய நிலையில், கடந்த மாதம் மாலோதி தன்னுடைய வீட்டில் இருந்து தன் தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தன்னுடைய கள்ள காதலியை தேள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மாலோதிக்கு தெரிய வந்தால் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தன்னுடைய கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது மாலதி காணாமல் போன நிலையில்,மாலோதியின் வீட்டார் காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறார்கள் அதன் பிறகு தான் அவர் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு ராஞ்சியில் இருந்து மோப்பநாய் படை, தடயவியல் குழு, கைரேகை நிபுணர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஒரு தகப்பன் செய்யும் காரியமா இது…..? ஆண் குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமி சித்தப்பா மீது போக்சோ வழக்கு பாய்ந்தது…..!

Fri May 5 , 2023
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வாசித்து வந்தார். கடந்த 2019 ஆம் வருடம் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் இதனைத் தொடர்ந்து, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியே யாரிடமாவது […]
pocso

You May Like