கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க தன் மீதே ஆசிட் வீச சொன்ன கள்ளக்காதலி நடத்திய அற்புத நாடகம்….!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா(46). சித்திரன்கோடு அருகே அரிசி மில் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி லதா தன்னுடைய மில்லில் நுண்ணியூர் கோணம் பகுதியில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் மீது ஆசை வீசிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த லதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் குலசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதி விட்டனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கா வல்துறை இரண்டு தனிப்படை அமைத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் லதாவின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையினர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. அதாவது, காவல்துறையிடம் அவர் தெரிவித்ததாவது தனக்கு சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு கடன் உள்ளதாகவும் கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பி செல்வதற்கு தன்னுடைய கள்ளக்காதலனான முதலார் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் கிருமாதாஸ் என்பவருடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆகவே கள்ளக்காதலனான முதலார் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் கிருபாதாஸ்( 52) அவருக்கு உதவியாக இருந்த அர்ஜுன் குமார் (24),ஷாஜின் (23), ஜஸ்டின் ராபின் (39) வெளியிட்டவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Post

’அதை நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்’..!! தவறை ஒப்புக்கொண்ட இயக்குநர் வெற்றிமாறன்..!!

Wed Apr 5 , 2023
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இளையராஜாவின் இசைக்கு பாராட்டுகள் குவிந்துவரும் அதே வேளையில், படத்தின் பின்னணி இசை 80களில் வெளியான படங்களில் இருப்பதுபோல […]

You May Like