ஒரு தலைவர் செய்கின்ற வேலையா இது…..? மாணவிகளுடன் ஆபாசமாக இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் மாணவரணி தலைவரின் மறுபக்கம் இவ்வளவு கேவலமானதா…..?

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அகில இந்திய வித்யார்த்தி பரிசு என்ற அமைப்பின் தலைவர் பல பெண்களுடன் தகாத முறையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றம் சுமத்தப்பட்ட பிரதிக் கவுடா கர்நாடக மாநிலத்தின் தீர்த்தஹள்ளி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் கௌடா பல இளம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகளை செய்து அவற்றை பதிவு செய்து வந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது பிரதிக் செல்போனிலிருந்து பரப்பப்பட்ட இந்த வீடியோக்கள் ஷிவமோகா மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் தேசிய மாணவர் சங்கத்தின் தீத்தஹள்ளி பிரிவை சேர்ந்தவர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கின்றனர். அந்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்து அவர் மாணவிகளை மிரட்டியதாகவும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

குற்றம் சுமத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அதோடு, இதுபோன்ற ஆபாச வீடியோக்களை யாரும் மேற்கொண்டு பகிர வேண்டாம் என்றும் வீடியோவை பகிர்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

தீர்த்தக்ஹள்ளியில் சில மாணவிகளுடன் ஆர் எஸ் எஸ் இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்தத்தின் தலைவர் பாலியல் செயல்களில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் மேலும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Next Post

9 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்..!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

Tue Jun 20 , 2023
கண்ணூரில் 9 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக கடித்து இழுத்துச் செல்லும் காட்சி காண்போரை பதபதைக்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் முழபிலாங்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 வயது வாய் பேச முடியாத சிறுவனை தெரு நாய் கடித்துக் கொன்ற நிலையில், அதே பகுதியில் மீண்டும் தெரு நாய் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாச்சாக்கரை எல்பி பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஜான்விக் என்ற […]
9 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்கள்..!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

You May Like