கர்நாடகத்தில் அன்பு வெற்றி பெற்றுள்ளது……! வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேச்சு…..!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 136 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.


பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னிலையில் உள்ளதால், அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்ட நிலையில், அந்த கட்சியின் தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே தலைநகர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி. ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கிய தொண்டர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. இந்த வெற்றி அனைத்து மாநிலங்களிலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

அவதூறான மொழியை பேசி நாங்கள் தகராறு செய்யவில்லை. நாங்கள் கர்நாடக மாநிலத்தின் ஏழைகளுக்காக சண்டையிட்டோம் வெறுப்பு அரசியல் என்பதை கர்நாடக மாநிலத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த மாநிலத்தில் அன்பு வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வழங்கிய 5 வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Next Post

வங்கிக்கு போனா Lunch Time-னு சொல்லி வெயிட் பண்ண வைக்கிறாங்களா..? இனி கவலையே வேண்டாம்..!!

Sat May 13 , 2023
நாம் அனைவரும் வங்கிக்கு முக்கிய வேலைக்காக சென்றால், அந்த பணியை முடிக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். அதிலும், 12 மணிக்கு மேலே சென்றால் போதும் மதிய உணவு இடைவேளை என காரணம் காட்டி 3 மணி வரை காக்க வைப்பார்கள். கடந்த சில காலங்களாக இது குறித்த மீம்ஸ்களையம் நாம் இணையத்தில் பார்த்திருப்போம். மதிய உணவு இடைவேளை என்ற பெயரில் வங்கி ஊழியர்கள் பணியில் அலட்சியம் காட்டுவது நம்மில் […]
bank in e1654658464705

You May Like