குழந்தையை தத்து கேட்டு நச்சரித்த கள்ளக்காதலியை போட்டு தள்ளிய கள்ளக்காதலன்….! கேரளாவில் பயங்கர சம்பவம்…..!

கேரள மாநிலம் காசர்கோடு என்ற மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா (34). அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணம் ஆகி கணவனும் 2 குழந்தைகளும் இருக்கின்றன. அதேபோல காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்டோர் இருக்கின்றன.


இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2️ மணி அளவில் கள்ள காதலியான தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்து கள்ளக்காதலன் சதீஷ் ஆவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை கேட்டு காவல்துறையினரே சற்று அதிர்ச்சிக்குள்ளாயினர் பின்பு காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தனர்.

அதாவது சதீஷும் தேவிகாவும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக முறை தவறிய உறவில் இருந்து வந்தது. காவல்துறையினரின் இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதற்கு நடுவே சதீஷின் குழந்தையை பிடித்துப் போனதன் காரணமாக சதீஷின் கள்ளக்காதலி தேவிகா அவரிடம் அவருடைய மகளை தனக்கு தத்து கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து, வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய நிலையில் தான், இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்ட நிலையில், குழந்தை வேண்டும் என்று மறுபடியும் தேவிகா அடம்பிடிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சதீஷ் அறையில் இருந்த கத்தியை எடுத்து அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, என்னை வாழ விடவில்லை, என்னுடைய குழந்தையை கேட்டு தொடர்ந்து நச்சரித்தார். ஆகவே அதை தாங்க முடியாமல் அவரை கொலை செய்து விட்டேன் என்று சதீஷ் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, தனியார் விடுதியில் சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு கள்ளக்காதலன் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்து அவரிடம் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

கள்ளக்காதல்..!! மனைவியின் பிறப்புறுப்பை கோடாரியால் வெட்டிய கணவன்..!! துடிதுடித்து பலியான சோகம்..!!

Thu May 18 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் தலோட் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலு சிங். 35 வயதான இவரின் மனைவி தேஜ்குன்வர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாலு சிங் அடிக்கடி தன் மனைவியுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், சம்பவத்தன்று பாலுசிங் […]
Crime POlice Rowdy

You May Like