தோழி வீட்டில் ஜூஸ் குடித்த நபர்.. உடல் பாகங்கள் அழுகி உயிரிழந்த திகில் சம்பவம்.!

கேரளா திருவனந்தபுரத்தின் அருகே மால்யங்கரையை பகுதியை சேர்ந்த ஜியோ என்றழைக்கப்படும் ஜெயராஜ் என்பவருக்கு ஷரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர், நெயூர் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎஸ்சி கதிரியக்கவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். இதனிடையில் சில தினங்களுக்கு முன்பு 14-ம் தேதி, ஷரோன் ராஜ் தனது காதலி கொடுத்த ஜூஸை பருகியுள்ளார்.


அதன்விளைவாக, அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படவே, அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றார். இத்தகைய நிலையில், கடந்த 25-ம் தேதி உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த போலீசார் விசாரணையில், ஷரோன் ராஜ் மற்றும் அவரது நண்பர்களான ரெஜின் ஆகியோர் ராமவர்மன் சிராவில் பகுதியில் வசிக்கும் தனது தோழி வீட்டிற்கு காலையில் சென்றுள்ளனர். மேலு‌ம், ஷரோன் தன்னுடைய நண்பரை வெளியே தனியாக விட்டுவிட்டு இவர் மட்டும் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். சிலமணி நேரம் சென்றதும் ஷரோன் தோழி அளித்த ஜுஸை அவர் குடித்த உடனேயே வாந்தி எடுத்து, பிறகு உடனே மயங்கியாதவும் அவரது நண்பர் ரெஜின் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து பாரசாலா தாலுகா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலும் அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் பெரிய அளவில் எந்த பிரச்னைகளும் ஏற்படாத நிலையில், இரவிற்குள் ஷரோன் தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் அவரால் தண்ணீர் மற்றும் மருந்து ஆகியவை எடுக்க முடியவில்லை என குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர். மேலும், 17-ம் தேதி மீண்டும் அதே மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருடைய சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து வரவே ஷரோன்க்கு ஒன்பது நாட்களுக்குள் மூன்று முறை டயாலிசிஸ் செய்து வந்தனர்.

இதற்கிடையில், அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போது, தனக்கு பழக்கமான தோழியின் வீட்டிற்கு ஒரு வருடங்காள செல்லும்போது எல்லாம் ஜூஸ் பருகியதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் ஆசிட் கலந்துள்ளது என தெரிவித்த நிலையில் அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அடுத்து சில நாட்களில் அவரின் உள் உறுப்புகள் சிதைந்து விட்டதாக உறவினர்கள் கூறியதுடன், வென்டிலேட்டரில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி, ஷரோனின் மூத்த சகோதரான ஷிம்னோ கூறியதாவது, ஷரோனும் அப்பெண்ணும் காதலித்து வந்தனர் என பாராசாலா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனை பற்றி விசாரணை நடத்த கோரியுள்ளார்.

1newsnationuser5

Next Post

தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ள மு.க.ஸ்டாலின்.! ஆனால், ஒரு ட்விஸ்ட்.!

Sat Oct 29 , 2022
நேற்று இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு வலியால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் முதுகுவலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு வந்த காரணத்தால் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்திற்கு […]
Screenshot 20221029 104454 653

You May Like