“கிசான் கால் சென்டர்” விவசாயிகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்…‌!

kissan 2025

வானிலை, சந்தை நிலவரம், அரசின் திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்பான விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1800-180-1551 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


கிசான் கால் சென்டர் எனப்படும் விவசாயிகளுக்கான அழைப்பு மையம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படுவதாக கூறினார். பயிர் பாதுகாப்பு, நீர் நிர்வாகம், உரப் பயன்பாடு, பயிர் வகைகள், விதைப்புக் காலம் போன்றவை குறித்த தகவல்களை விவசாயிகள் இந்தக் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். கிராமப்பகுதிகளில் இருந்தும், குக்கிராமங்களிலிருந்தும் தொடர்புகொள்ளலாம் என்றும் விவசாயிகளின் கேள்விகளுக்கு அந்தந்த மாநில மொழியில் பதிலளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வேளாண் தொலைநிலை ஆலோசகர்கள் வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட அண்மைத் தகவல்கள் பற்றி தெரிவிப்பார்கள். வீடியோக்கள் பகிர்வு, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல், புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் நவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த அழைப்பு மையங்களில் கிடைப்பதால் வேளாண் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Vignesh

Next Post

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு கோளாறுகளை அதிகரிக்கும்!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Sat Aug 16 , 2025
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]
paracetamol 11zon

You May Like