அலர்ட்..! உயிருக்கே ஆபத்து.. மறு உத்தரவு வரும் வரை இந்த நிறுவன மருந்தை பயன்படுத்த வேண்டாம்…!

medicine 2025

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் உள்ளிட்ட 5 மருந்துகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. மற்ற 4 மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை. ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், டை எத்திலீன் கிளைசால் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதனால், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்துக்கு பிறகு அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Vignesh

Next Post

"நீங்கள் காஸா அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், எல்லாம் பாழாகிவிடும்"!. ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை!

Sat Oct 4 , 2025
ஹமாஸ் பயங்கரவாதக் குழு “இராணுவ ரீதியாக சிக்கியுள்ளது”, பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளின் ஆதரவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட அதற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் டிரம்ப் கூறியதாவது, “ஹமாஸ் பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் ஒரு மிருகத்தனமான மற்றும் வன்முறை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அவர்கள் மக்களைக் கொன்றுள்ளனர், இது அக்டோபர் 7 ஆம் தேதி […]
20250214034154 Trump Don

You May Like