ஹூக்கா புகைப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்களைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் ஹூக்கா புகைப்பதைத் தடை செய்வதாக, கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் இளைஞர்களை” பாதுகாப்பதற்காக, “தீவிரமான உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு” ஹூக்கா புகைப்பது தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அனைத்து ஹூக்கா பொருட்கள் மற்றும் அவற்றை புகைக்க பயன்படும் ஷீஷா விற்பனை விற்பனை, கொள்முதல், […]

மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மணிப்பூரில் செயல்பட்டு வந்த மைதேயி மக்கள் விடுதலை, புரட்சிகர மக்கள் முன்னணி உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, நாட்டின் இறையாண்மையை பின்பற்றவில்லை எனக்கூறி மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள […]