Lok Sabha | வாக்கு சேகரிக்க வந்த தமிழச்சி தங்கபாண்டியனை விரட்டியடித்த பொதுமக்கள்..!! ஏன் தெரியுமா..?

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அத்தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி மயிலாப்பூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்றபோது, பொதுமக்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல், திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேதம் அடைந்திருப்பதாகவும், நீண்ட நாட்களாக சீர் செய்யக்கோரி கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், தமிழச்சி தங்கபாண்டியனின் பிரச்சார வாகனத்தை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர்.

இதனையடுத்து, தனது பிரச்சார வாகனத்துடன் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றார். அதேபோன்று மயிலாப்பூர் பகுதியிலும் அவரை பிரச்சாரம் செய்யவிடாமல், பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More : ’இதுக்கு ஒரு முடிவே இல்லையா’..? மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

அதிகார துஷ்பிரயோகம்..!! அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மீது அதிமுக வேட்பாளர் பரபரப்பு புகார்..!!

Wed Mar 27 , 2024
தன்னை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்த திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோகர் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மூலம் அளித்த புகாரில், ”கடந்த 25.03.2024 அன்று வடசென்னை மக்களவைத் தேர்தல் அலுவலகமான மாநகராட்சி 5 மண்டல அலுவலகத்தில் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நானும், […]

You May Like