தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மீசை வருவதற்கு முன்னரே காதல் வந்து விடுகிறது. எது நல்லது, எது கெட்டது என்று தெரியும் வயது வருவதற்கு முன்னரே நாம் நினைப்பது அனைத்தும் சரிதான் என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் பல விபரீதங்களை அவர்கள் சந்திக்க நேரிடும் போது தான் அவர்கள் எடுத்த முடிவின் விபரீதத்தை அறிந்து கொள்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா வசித்து வரும் அவருடைய உறவினர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய பெற்றோருக்கு தெரிவித்தபோது அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். ஆகவே அந்த சிறுமி குடும்பத்தினர் வேறு ஒரு நபருடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனை அறிந்து கொண்ட அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்ல நினைத்தால் அதன் அடிப்படையில் தன்னுடைய காதலனுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். சில தினங்கள் போன பிறகு அந்த சிறுமியை அவருடைய பெற்றோர்கள் சந்தித்து திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனை உண்டானதால் திருமணம் கடைசி சமயத்தில் நின்று போனது. ஆகவே ஆத்திரம் அடைந்த அந்த சிறுமியின் தந்தை சிறுமியை வீட்டின் அருகில் இருக்கக்கூடிய மரத்தில் தூக்கு போட வைத்திருக்கிறார். இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிறுமியின் உடலை எரித்து கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தெரியவந்த்தை தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்