மத்திய பிரதேசம் மாநிலத்தில் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கி விட்டு சிறையிலிருந்த மூன்று கைதிகளை அழைத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்கா மாவட்டத்தில் உள்ள நேபா நகரில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்து மூன்று பேரை அழைத்துச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன. மர்ம கும்பல் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் போது காவலர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் காட்சியும் அந்த காணொளிகளில் பதிவாகி இருக்கிறது.
காவல்துறையின் விசாரணையில் லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகளை விடுதலை செய்யும் பொருட்டு அந்த 60 பேருக்கு கொண்ட கும்பல் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்திருக்கிறது. இந்தக் கொடூர தாக்குதலில் காவல் நிலையம் பலமாக செய்து முடித்துள்ளது. லாக்கப்பை உடைத்து சிறைக்குள் இருந்த மூன்று கைதிகளை அவர்களுடன் அழைத்துச் சென்றுள்ளது அந்த கும்பல். இந்த தாக்குதல் நடக்கும் போது காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளும் பொருட்டு பாதுகாப்பான இடங்களில் மறைந்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.