நாயை கூட விட்டுவைக்காத காமுகன்.. குட்டி நாய்க்கு அரங்கேறிய கொடூரம்.!

மகாராஷ்டிரா பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில காமக்கொடூரர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளையும் விட்டு வைப்பதில்லை. சில நாட்களாக தொடர்ந்து வளர்ப்பு பிராணிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.


மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, பவாய் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் ஹிரா பென்னா என்ற வணிக வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தின் ஊழியர் பாசமாக நாய்க்குட்டி ஒற்றை வளர்த்து வந்துள்ளார்.

நாய்குட்டி பிறந்து ஆறு மாதங்களே ஆகிய நிலையில் , அந்த உணவகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஆகாஷ். அவர் அங்கே இருக்கும் அந்த 6 மாத நாய்க்குட்டியை பால்கனிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த வீடியோ விலங்குகள் நல ஆர்வலர் விஜய் மோஹானிக்கு பகிரப்பட்ட நிலையில், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஆகாஷை கைது செய்து, விசாரணை செய்ததில் மீண்டும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆகாஷ் அந்த நாய்க்குட்டிக்கு பலமுறை பாலியல் தொல்லை அளித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இது கேட்பதற்கே மிகவும் கொடுமையாக இருக்கிறது.

1newsnationuser5

Next Post

அதிர்ச்சி..!! கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Tue Nov 1 , 2022
நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய இளைய மகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 90’ஸ் களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. உழவன் படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ரம்பாவிற்கு சுந்தர் சி யின் உள்ளத்தை அள்ளித்தா படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்த படத்தில் உடையை காற்றில் பறக்கவிட்டு, தொடையழகை காட்டி அழகிய லைலா பாடலுக்கு டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் […]
அதிர்ச்சி..!! கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

You May Like