மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி இந்த கொலை சம்பவமானது நடந்தேறியுள்ளது.
சுபாங்கி ஜோக்தந்த் என்ற 22 வயது இளங்கலை ஹோமியோபதி மருத்துவ மாணவிக்கு அவருடைய பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் தான் வேறொரு நபரை காதலிப்பதாக சுபாங்கி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நடக்க இருந்த திருமணம் நின்றது. பெண்ணின் வீட்டினர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர். தங்களது மானம் போய்விட்டதாக நினைத்து அவர்கள் மகளை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த நிலையில் பெண்ணின் தந்தை,, சகோதரர் மற்றும் குடும்ப உறவினர்கள் சேர்ந்து ஜனவரி 22-ல் மருத்துவ மாணவியை அருகில் இருக்கும் பண்ணை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
அதன்பின் பிணத்தை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கொலை அடையாளங்களை மறைக்க பெண்ணின் உடலை அருகில் இருந்த ஓடையில் தூக்கி வீசி இருக்கின்றனர். உடல் பாகங்கள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், அவரின் கொலை சம்பவம் போலீசுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பெண்ணின் சகோதரன், தந்தை மற்றும் உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.