கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார் அதோடு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் தான் facebook போன்ற சமூக வலைதள பாக்குகளில் கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரத்தை பார்த்து இருக்கிறார். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் கனடாவிற்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் என்பவர் வைத்தீஸ்வரனை நேரடியாக சந்தித்திருக்கிறார் அப்போது கனடாவில் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும் இந்த வேலை உங்களுக்குத்தான் என்று உறுதி அளித்திருக்கிறார்.
அதோடு, இந்த வேலைக்கு விசா வாங்குவதற்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார் அவர் கூறியதை நம்பிய வைத்தீஸ்வரன் 3 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். அதோடு உங்களுடைய நண்பர்கள் யாராவது கனடா விரும்பினால் அவர்களையும் அழைத்து வருமாறு தெரிவித்திருக்கிறார்.
அதன் பேரில் வைத்தீஸ்வரன் தன்னுடைய நண்பர்களான வினோத், பிரதீப், ஆதித்யா, நந்தகுமார் உள்ளிட்டோரையும் தாயத்து வந்துள்ளார். அவர்களும் வெளிநாடு வேலை என்ற ஆசையில் மொத்தம் 23 லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார்கள். பிரகாஷ் வேலையை மட்டும் வாங்கிக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2021 ஆம் வருடம் காலநிலைத்தில் புகார் வழங்கினார் இதனை தொடர்ந்து காவல்துறையினர் வெளிநாடு வேலை என்று ஏமாற்றிய நபரை கண்டறிந்து சத்தியமங்கலத்தை சார்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து இருக்கிறார்கள்.