மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்; வன்முறை கும்பல் துப்பாக்கிச்சூடு.சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி

மணிப்பூரில் மக்களவை தேர்தலின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் ஆத்திரமடைந்த மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் தீ வைத்தது. மற்றொரு பகுதியில் துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறின. துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்பால் மேற்கில் உள்ள கைடெமில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளது. அந்த தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுடன் இதுகுறித்து பேசியதையடுத்து பிரச்னை தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

Read More: நடிகர் விஜய் கையில் பேண்டேஜ் – ‘GOAT’ படப்பிடிப்பின்போது விபத்தா?

Baskar

Next Post

மார்பகத்தில் ஏதேனும் மாற்றமா..? புற்றுநோய் அபாயம்..!! சாதாரணமா நினைக்காதீங்க..!!

Sat Apr 20 , 2024
புற்றுநோயின் அபாயம் எங்கோ ஒரு சில இடத்தில் இருந்த நிலையில், தற்போது நம் அண்டை வீட்டையும் நெருங்கி விட்டது. இந்நிலையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது வேறொன்றும் இல்லை. சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்படும் மார்பகப் புற்றுநோயைக் குறித்தது தான்..!! உடல் ரீதியாக பல இன்னல்களை கடந்து வரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்போது வெளியான அறிக்கையில், 2040 ஆம் […]

You May Like