முறைகேடு வழக்கில் ஏப்ரல் 17-ம் தேதி வரை மணீஷ் சிசோடியாவுக்கு சிறை தண்டனை…! நீதிமன்றம் உத்தரவு…!

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.


இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது.

இதைத் தொடர்ந்து அவரை மார்ச் 20-ம் தேதி வரை காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவை, ஏப்ரல் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Vignesh

Next Post

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்...! இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே...

Tue Apr 4 , 2023
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர்‌ மாதம்‌ உருவான மாண்டஸ்‌ புயல்‌ காரணமாக சென்னை,செங்கல்பட்டுமற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை, மற்றும்‌ இயந்திரங்கள்‌ சேதமடைந்தன அவ்வாறு சேதமடைந்த மீன்பிடி படகுகள்‌ மற்றும்‌ உபகரணங்களை ஆய்வுக்குழு ஆய்வுசெய்து. அதனடிப்படையில்‌ சேதமடைந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை மற்றும்‌ இயந்திரங்களுக்கும்‌ நிவாரணம்‌ வழங்க […]
124331 tn govtlogo

You May Like