காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். அதனை அறிந்த பெண், முகத்தை துணியால் மூடி, ஹோட்டலின் பின்புற ஜன்னல் வழியாக 12 அடி உயரத்தில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த வீடியோவை, பெண்ணின் கணவரின் குடும்பத்தினர் ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். வீடியோவில் ஹோட்டலின் கூரை மீதிருந்து பின்பக்க வழியாக அந்தப் பெண் கீழே குதித்து ஓடி செல்வது தெளிவாகக் காணப்படுகிறது. அதனை அவரது மாமியார் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
போலீசாரின் கூற்றுப்படி, பாக்பத்தின் துகானா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் 2019 இல் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு முன்பே மனைவி பலருடன் உறவு வைத்திருந்ததாக கணவர் குற்றம் சாட்டுகிறார். திருமணத்திற்குப் பிறகும் இது தொடர்ந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று அந்த பெண் தனது கள்ள காதலனுடன் பைக்கில் அமர்ந்து சென்றதை கணவன் நேரில் பார்த்து பின்தொடர்ந்து சென்றுள்ளார். இருவரும் ஹோட்டல் அறைக்கு செல்வதை பார்த்த கணவன் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மனைவிக்கு இது குறித்து தகவல் தெரிந்தவுடன், அவர் ஹோட்டலின் பின்னால் உள்ள கூரையிலிருந்து குதித்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. கள்ள காதலனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: போர் பதற்றம்!. ஈரானில் வாட்ஸ் அப் பயன்படுத்த திடீர் தடை!. என்ன காரணம்?