மதிமுக நிர்வாகிகள் டார்கெட்.. கரூர் கோவையில் ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி..!! கூட்டணியில் விரிசல்..?

vaiko senthil balaji

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகளை திமுக தன் கட்சியில் இழுத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் உள்ள மதிமுக நிர்வாகிகள், வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்கும்படி தலைமையை வலியுறுத்த திட்டமிட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மதிமுகவுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவத்திருந்தார். அண்மையில் ஈரோட்டில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்திலும் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடியாகவே மதிமுக நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைத்து திமுக அதிர்ச்சி கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில் மதிமுக மாவட்ட நிர்வாகி ரவி, பாஜக பூத் கமிட்டி பொறுபாளர் சண்முகம் , அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். மாற்று கட்சியினரை திமுகவுக்கு இழுக்கும் இந்த அதிரடி ஆட்டம் கரூரை தொடர்ந்து கோவையிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க திமுக தலைமை தயக்கம்காட்டி வந்தது. மதிமுகவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோவிடம் அதிகாரம் பெருகுவதை விரும்பாத மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியபோதும், அவர்களை அரவணைக்க திமுக தயாராக இல்லை. இந்தச் சூழலில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரை திமுக சமீபத்தில் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டது. இதனால் மதிமுகவில் சலசலப்பு உருவாகியுள்ளது.

Read more: புதிய எடை குறைப்பு ஊசிகள்: பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!

Next Post

அலுமினிய பாத்திரம் தினசரி சமையலுக்கு ஏற்றதா..? எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்..? - நிபுணர்கள் விளக்கம்

Mon Jun 30 , 2025
இன்றைய காலத்தில் பலர் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கிறார்கள். குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைப்பது போன்ற காரணங்களால் அவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தப் பாத்திரங்களுக்கு காலாவதி தேதி உள்ளது. இதுபோன்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய தரநிலைகள் […]
aluminium

You May Like