#அரியலூர் : நெருக்கமாக பழகிட்டு.. கம்பி நீட்டிய காதலனை.. கம்பி எண்ண வைத்த காதலி.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாதனப்பட்டு எனும் கிராமத்தில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த ஆனந்த்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆசையாக பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.


இதை அந்த பெண்ணும் நம்பிய நிலையில் ஆனந்தராஜும்,அவரும் கணவன் மனைவியைப் போல மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆனந்த்ராஜ் பெண்ணிடம் இருந்து விலக எத்தனித்தார். இதனால், பதறிப்போன அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், உன்னை எல்லாம் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஆனந்த்ராஜ் இழிவாகப் பேசி திருமணத்திற்கு மறுத்துள்ளார். எனவே, அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஆனந்த்ராஜ் மீது புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்த் ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஆனந்த்ராஜுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்ப்பை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் வழங்கினார்.

1newsnationuser5

Next Post

போதையில் அண்ணியிடம் சென்று தம்பி செய்த செயல்.. அந்த இடத்திலேயே நடந்த சம்பவம்.!

Fri Jan 27 , 2023
சோழபுரம் கிராமத்தில் வசித்து வரும் பொன் மாடசாமி மற்றும் முத்துராஜ் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு மாடசாமியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரம் பார்த்து முத்துராஜ் போதையில் சென்று மாடசாமியின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பதறிப் போன மாடசாமியின் மனைவி முத்துமாரி உடனே தனது கணவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதனை […]
652209 attack assualt beat 062417

You May Like