அதிமுகவில் இணைப்பு… டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க ஓ.பி.எஸ் திட்டம்…!

ops 2026

கொச்சியில் இருந்து நேற்று சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக உரிமை மீட்புக்குழுவைத் தொடங்கி நிர்வாகிகளை நியமித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தரப்பு ஒத்துழைக்காததாலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போது சந்திக்க இயலாத காரணத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்து வெளியேறினார்.

தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனும் விலகினார். இந்நிலையி்ல், அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் பழனிசாமியால் நீக்கப்பட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டார். இதற்கிடையில் யாரையும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று பழனிசாமி கூறிவிட்டதால், இணைப்பு முயற்சிகளுக்கு வலுவில்லாமல் போனது.

சமீபத்தில் நிர்வாகிகளுடன் பேசிய ஓபிஎஸ், டிசம்பர் 15-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தப்போவதாகவும், அதற்குள் ஒருங்கிணைக்க வேண்டும், இல்லாவிட்டால், எங்கள் முடிவை மக்கள் ஏற்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அவர் தனது அதிமுக உரிமை மீட்புக்குழுவை மாற்றிவிட்டு அதிமுக உரிமை மீட்புக் கழகமாக பதிவு செய்து கட்சியாக நடத்தப்போவதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சிக்கு சிகிச்சைக்காக சென்ற ஓபிஎஸ், அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், பாஜக தலைவர்கள் மற்றும் தமிழக பொறுப்பாளர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாகவும், அவர் மூலம் ஓபிஎஸ் பாஜக தலைவர்களை சந்திக்கலாம், பாஜக கூட்டணிக்குள் ஓபிஎஸ் மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vignesh

Next Post

இன்று கார்த்திகை தீபம்..!! எக்காரணத்தை கொண்டும் இந்த 3 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..!!

Wed Dec 3 , 2025
தீபம் என்பது மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்கும் மங்களப் பொருட்களில் ஒன்றாகும். சிவபெருமானை வேண்டி அன்னை பார்வதி தேவி தவம் இருந்து, அவரது உடலில் பாதியாக இடம்பிடித்த நாள் என்பதால், கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றி வழிபடுவது சிவசக்தி அருளைப் பெறுவதற்கான அற்புதமான வழியாகச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் இறைவனை ஒளி வடிவமாக வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பையும் நன்மைகளையும் பெற முடியும் என்பது ஐதீகம். கார்த்திகையின் ஆன்மீக […]
Karthigai Deepam 2025

You May Like