நிறுவன வளாகத்திலேயே தூக்கில் தொங்கிய வடமாநில இளைஞர்! காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்  பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற இளைஞர்  இவருக்கு வயது 21. இவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த ஊரில் பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். வேலை முடித்த பின்பு  தனது காதலியுடன் செல்போனில் பேசி வருவதை இவரது வழக்கமாக இருந்திருக்கிறது. கடந்த சில தினங்களாக அவருக்கும் அவரது காதலிக்கும் ஏதோ பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த நிலையிலேயே காணப்பட்டு இருக்கிறார் ரோஷன் குமார்.


இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ள ரோஷன் குமார் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார். இப்போது மறுபடியும் காதலியிடம் இருந்து போன் வரவே அப்போதும் பிரச்சனை தொடர்ந்து இருக்கிறது. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர்  நிறுவன வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் நிர்வாகத்திடம்  தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாகம் காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தது .

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை இறந்த ரோஷன் குமாரின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் அங்கிருந்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தனர். நிர்வாக  வளாகத்திலேயே ஒருவர்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இது தொடர்பாக காவல்துறையை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறது. இதற்கு அவரது காதல் விவகாரம் மட்டும் தான் காரணமா? இல்லை வேறு காரணம் இருக்குமா?  உண்மையாகவே அந்த நபர் தற்கொலை தான் செய்து கொண்டாரா? என  பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நிறுவன வளாகத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த நிறுவனம் ஊழியர்களிடம் அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கை! ஏழு வருட சிறை தண்டனை!

Tue Feb 7 , 2023
கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் நல்ல நட்பாக மாறியிருக்கிறது. பின்னர் அந்தப் பழக்கமே நெருக்கமாக […]
WhatsApp Image 2023 02 07 at 7.06.13 PM

You May Like