பணமா? நாடா? என்ன சொல்லுகிறார் IPL மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை மொத்தம் 77 டெஸ்ட் போட்டிகளில் 27.52 சராசரியில் 306 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.


2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த முறை ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. அதன்பின் நடைபெற்ற எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்கவில்லை. தொடர்ந்து ஐபிஎல்லை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல்-லில் ஏன் விளையாடுவதில்லை என்பது குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், ” ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவதற்காக, சில விஷயங்களை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஐபிஎல் தொடரில் பணம் நிறைய கிடைக்கிறதுதான். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட விரும்புகிறேன்.

10 வருடங்களுக்கும் மேலாக மூன்று பார்மட் கிரிக்கெட்டிலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவது கடினமான ஒன்றுதான். ஆனால் நான் இவ்வளவு தூரம் வந்ததற்காக அணிக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்க விருப்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

1newsnationuser1

Next Post

இவர்களுக்கு எல்லாம் கல்வி கட்டணம் கிடையாது...! மீறி வசூலித்தால் நடவடிக்கை...! அரசு அதிரடி...!

Wed Jun 7 , 2023
மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியதாவது; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் தனி கட்டணம் செலுத்துவதில் […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like