சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகளுக்கு கொரோனா உறுதி..தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை.. ! 

சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.


ஏற்கனவே சீனாவில் இருந்து வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், பெங்களூரைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் இருந்து நேற்று மதுரை வந்த தாய் மற்றும் மகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சீனாவில் இருந்து இந்தியா வரும் மக்களிடையே கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தற்போது அதிகளவில் மக்களிடையே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

1newsnationuser5

Next Post

மனித மூளையை உண்டு மரணமடைய செய்யும் அமீபா..! 

Thu Dec 29 , 2022
தென் கொரியாவில் வசிக்கும் 50 வயது முதியவர் நான்கு மாதங்களாக தாய்லாந்தில் இருந்துள்ளார். அவர் தென் கொரியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு டிசம்பர் 10 அன்று தாய்லாந்தில் இறந்தார். அவர் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது.  ஆனால் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் அவர் Naegleria foliari amoeba நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறியது. ஒற்றை செல் உயிரினமான நைஜெலேரியா ஃபோலியரி ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற […]
n456599664167229252332172a9a6624915e5e837d5fc1d485c315b8efe062cd5367107667ddb9d206ebbf9

You May Like